"தி.மு.க. அரசியல் பண்பாட்டை கடைபிடிக்கவில்லை" - அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

தி.மு.க. தலைவர் கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்திற்கு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பதில், தி.மு.க. அரசியல் பண்பாட்டை கடைப்பிடிக்கவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.
தி.மு.க. அரசியல் பண்பாட்டை கடைபிடிக்கவில்லை - அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
x
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாநிதி மறைவின்போது உரிய அரசு மரியாதை வழங்கி அரசியல் பண்பாட்டுடன் அ.தி.மு.க. நடந்து கொண்டதாக தெரிவித்தார். தி.மு.க. உட்கட்சி பூசலைப் பயன்படுத்தி அ.தி.மு.க. குளிர்காய விரும்பவில்லை என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்