துணை முதலமைச்சர் மீதான புகார் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு எதிரான சொத்து புகார் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்குகள் நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், பன்னீர்செல்வத்தின் மீதான சொத்து புகார் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி விசாரணையை விரைந்து முடிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டு வழக்குகளை முடித்து வைத்தார். விசாரணையில் தாமதம் ஏற்பட்டால் மனுதாரர்கள் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story