ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு

பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொதுக்கூட்டம் நடத்தியதாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு
x
பா.ம.க. 30வது ஆண்டு விழாவையொட்டி, கடந்த 16ஆம் தேதியன்று சென்னை அடையாறு சாஸ்திரி நகர் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், அனுமதி அளித்த நேரத்தை விட கூடுதலாக அரைமணி நேரம் கூடுதலாக கூட்டத்தை நடத்தியதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட 5 பேர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ், சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்