அதிக ஊழல் நடக்கும் மாநிலம் தமிழகம் - அமித்ஷா பரபரப்பு பேச்சு

நாட்டிலேயே அதிக ஊழல் நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது வேதனை அளிப்பதாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அதிக ஊழல் நடக்கும் மாநிலம் தமிழகம் - அமித்ஷா பரபரப்பு பேச்சு
x
"அதிக ஊழல் நடக்கும் மாநிலம் தமிழகம்"

சென்னை  ஈஞ்சம்பாக்கத்தில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் 15 ஆயிரம் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்  பேசிய அமித்ஷா,  மத்திய பாஜக அரசு, தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களுக்கு வழங்கிய நிதி குறித்து பட்டியலிட்டார். தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்காக மத்திய பாஜக அரசு இதுவரை 5 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபா​ய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அமித்ஷா கூறினார். பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்ததும் தமிழக எல்லையை கடந்து தமிழின் பெருமை கொண்டு செல்லப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நாட்டிலேயே அதிக ஊழல் நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது வேதனை அளிப்பதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்