ஸ்ரீரங்கம் சென்ற ஸ்டாலினுக்கு பட்டு வஸ்திர மரியாதை

ஸ்ரீரங்கம் சென்ற தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினுக்கு, ரங்கநாதர் கோயில் எதிரில் பட்டு வஸ்திர மரியாதை அளிக்கப்பட்டது.
ஸ்ரீரங்கம் சென்ற ஸ்டாலினுக்கு பட்டு வஸ்திர மரியாதை
x
திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடந்த தி.மு.க நிர்வாகிகள் இல்லத் திருமண விழா மற்றும் காதுகுத்து நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்துகொண்டார். அங்கிருந்து காரில் புறப்பட்ட ரங்கநாதர் கோயில் வழியாக வந்த ஸ்டாலினுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

மங்கள வாத்தியங்கள் முழங்க, பாசுரங்கள் பாடியபடி ஸ்டாலினுக்கு பட்டு வஸ்திரம், மாலை அணிவித்து அர்ச்சர்கள் மரியாதை செய்தனர். அதன்பின், கோயில் யானை ஸ்டாலினுக்கு மாலை அணிவித்து ஆசி வழங்கியது. அந்த யானைக்கு அவர் கரும்பு வழங்கினார். 

 




Next Story

மேலும் செய்திகள்