"இந்திய பொருளாதாரம் மீண்டு வருகிறது" - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்

இந்திய பொருளாதாரம் கொரோனா ஊரடங்கின் தாக்கத்தில் இருந்து மீண்டு வருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதாரம் மீண்டு வருகிறது - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்
x
இந்திய பொருளாதாரம் கொரோனா ஊரடங்கின் தாக்கத்தில் இருந்து மீண்டு வருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பின் கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய அவர் முதலீடு செய்வது குறித்து அச்சத்தில் இருந்து விடுப்பட்டுள்ள பன்னாட்டு நிதி நிறுவனங்கள் இந்திய பங்கு சந்தைகளில் அதிக முதலீடு செய்து வருவதாக தெரிவித்தார். இதனால் இந்தியப் பங்கு சந்தை வெகுவாக உயர்வதாக குறிபிட்ட அவர் தங்கம் விலை மீண்டும் குறைந்து வருகிறது என்றார். அனைத்து சிறு, குறு நிறுவனங்களுக்கு தேவையான கடன் உதவிகள் தாரளமாக கிடைப்பதாக அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்