கொரோனா பாதிப்பால் ஸ்ரீநகரில் ஒருவர் உயிரிழப்பு
கொரோனா பாதிப்பால் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ஒருவர் உயிரிழந்தார்.
கொரோனா பாதிப்பால் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ஒருவர் உயிரிழந்தார். 65 வயதான அவர் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்தார். இதனால் கொரோனா பாதிப்பால் இந்தியாவில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்து. உயிரிழந்த நபருடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர்களும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
Next Story