பேசாமல் இருந்து தற்போது மவுனம் கலைத்த ஷாருக்கான்

தமது குழந்தைகள் இந்தியர் எனும் மதத்தை சேர்ந்தவர்கள் என, பாலிவுட் நடிகர் ஷாருக்கான், பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
பேசாமல் இருந்து தற்போது மவுனம் கலைத்த ஷாருக்கான்
x
பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்டவற்றிற்கு எதிராகவும், ஆதரவாகவும் நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இது குறித்து பல அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் கருத்து கூறி வருகின்றனர். குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் டெல்லி மாணவர்கள் மீதான வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாலிவுட் நடிகர்கள் பரினிதி சோப்ரா, பார்வதி நாயர், தியா மிர்சா, அனுராக் காஷ்யப், சயானி குப்தா, ஹியுமா குரேஷி உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவு செய்தனர். 

இதனிடையே நீண்ட நாள் மவுனம் காத்து வந்த நடிகர் ஷாருக்கான்,  மும்பையில் நடைபெற்ற விழா ஒன்றில், தனது மவுனத்தை கலைத்துள்ளார். அங்கு பேசிய அவர், தாம் ஒரு இஸ்லாமியர், தமது மனைவி இந்து என்றும் அதே சமயம் தமது குழந்தைகள் இந்துஸ்தான் என்றும் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்