"கேரள செவிலியர்களுக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு" - கேரள சுகாதார துறை அமைச்சர் ஷைலஜா

கொரோனா பாதித்ததாக சந்தேகிக்கப்படும் வெளிநாடு வாழ் கேரள செவிலியர்களுக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கேரள சுகாதார துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.
கேரள செவிலியர்களுக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு - கேரள சுகாதார துறை அமைச்சர் ஷைலஜா
x
கொரோனா பாதித்ததாக சந்தேகிக்கப்படும் வெளிநாடு வாழ் கேரள செவிலியர்களுக்கு அந்த நாட்டிலேயே சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கேரள சுகாதார துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார். கொரோனா தாக்குதலுக்கு உள்ளான நாடுகளிலிருந்து கேரள செவிலியர்கள் தாய் நாட்டிற்கு திரும்புவதாக வெளியான தகவலை தொடர்ந்து கேரள மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஷைலஜா,  வெளிநாட்டு வாழ் கேரள செவிலியர்கள் அச்சத்தின் காரணமாக தாய் நாட்டிற்கு திரும்ப விரும்பினாலும், அவர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் இந்திய தூதரகங்கள் மூலம் கேரள அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். இதனால் கேரள மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்