காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்? - குஜராத்தில் 9 ஆம் வகுப்பு தேர்வில் சர்ச்சை கேள்வி

மகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்? என குஜராத்தில் 9-ஆவது வகுப்பு தேர்வில் கேட்கப்பட்டுள்ள சர்ச்சை கேள்வி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்? - குஜராத்தில் 9 ஆம் வகுப்பு தேர்வில் சர்ச்சை கேள்வி
x
மகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்?என குஜராத்தில் 9-ஆவது வகுப்பு தேர்வில் கேட்கப்பட்டுள்ள சர்ச்சை கேள்வி  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம், காந்திநகர் பகுதிகளில் இயங்கி வரும் கல்வி நிறுவனங்கள் இணைந்து சுபலாம் ஷாகா விகாஸ் சங்குல் என்கிற அமைப்பை நடத்தி வருகின்றன. இந்த பள்ளிகளின் கேள்விதாள்களை அந்த அமைப்பே தயாரித்து அளிக்கிறது. இந்த நிலையில், 9 ஆம் வகுப்பு தேர்வில் கேட்கப்பட்டுள்ள சர்ச்சை கேள்வி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரி கூறுகையில், கேள்வித்தாள் தயாரிப்பில் மாநில அரசுக்கு தொடர்பில்லை என்றும்,  இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்