ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : அக். 3 வரை ப. சிதம்பரத்தின் காவல் நீட்டிப்பு

ஐ. என். எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்திற்கு, அக்டோபர் 3 ம் தேதி வரை, காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
x
ஐ. என். எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்திற்கு, அக்டோபர் 3 ம் தேதி வரை, காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது. ப. சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததால், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ப. சிதம்பரத்திற்கு உடல் நலக்குறைவு காரணமாக, நீதிமன்ற காவல் நீட்டிப்பிற்கு, அபிஷேக் சிங்வி எதிர்ப்பு தெரிவித்தார். காவலில் வைக்க, சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து. ப. சிதம்பரம் மீண்டும் திகார் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரம் மீதும், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் சிபிஐயும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்