கடந்த ஆண்டு வெள்ளத்தின்போது பிறந்த குழந்தைக்கு முதல் பிறந்த நாள் - கர்ப்பிணியை மீட்ட ராணுவ பைலட் விழாவில் பங்கேற்றார்

கடந்த ஆண்டு வெள்ளத்தின்போது பிறந்த குழந்தையின் முதல் பிறந்த நாள் விழாவில் கர்ப்பிணியை வெள்ளத்தில் மீட்ட ராணுவ பைலட் விழாவில் பங்கேற்றார்
கடந்த ஆண்டு வெள்ளத்தின்போது பிறந்த குழந்தைக்கு முதல் பிறந்த நாள் - கர்ப்பிணியை மீட்ட ராணுவ பைலட் விழாவில் பங்கேற்றார்
x
கேரளாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு பிறந்த ஆண் குழந்தையின், பிறந்த நாள் விழாவில்  அந்த ஹெலிகாப்டரின் விமானி விஜய் வர்மாவும், சிகிச்சையளித்த மருத்துவர் தமன்னாவும் கலந்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

எர்ணாகுளத்தை சேர்ந்த சாஜிதா என்ற பெண் கடந்த ஆண்டு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது வெள்ளத்தில் சிக்கினார். அப்போது அவரை மீட்ட விமானப் படையினர், அவரை விமானப்படை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பிறந்த குழந்தை சுபஹானின் முதலாமாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் விமானியும், பிரசவம் பார்த்த மருத்துவரும் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்