"அணு ஆயுத பயன்பாடு - சூழ்நிலையை பொறுத்து முடிவு" - பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்தக்கூடாது என்ற இந்தியாவின் கொள்கை வருங்காலத்தில் ஏற்படப்போகும் சூழ்நிலையைப் பொறுத்தே அமையும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
அணு ஆயுத பயன்பாடு - சூழ்நிலையை பொறுத்து முடிவு - பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
x
அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்தக்கூடாது என்ற இந்தியாவின் கொள்கை வருங்காலத்தில் ஏற்படப்போகும் சூழ்நிலையைப் பொறுத்தே அமையும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நடைபெறும் சர்வதேச இராணுவ பயிற்சி போட்டி தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல தடைகளை கடந்து, வாஜ்பாய் அணு ஆயுத சோதனைக்கு அனுமதி அளித்தார் என்றும் இதே பொக்ரானில் தான் இந்தியா அணு ஆயுத பலம் பொருந்திய நாடுகள் பட்டியலில் இடம்பிடித்தது என்றும் அவர் தெரிவித்தார். இதனிடயே அமைச்சரின் இந்த கருத்து,  பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாக கருதப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்