மதுபானங்களின் விலை திடீர் உயர்வு - மதுப்பிரியர்கள் அதிர்ச்சி

புதுச்சேரியில் பீர் உள்ளிட்ட மதுபானங்களின் விலை திடிரென உயர்த்தப்பட்டுள்ளது.
மதுபானங்களின் விலை திடீர் உயர்வு - மதுப்பிரியர்கள் அதிர்ச்சி
x
புதுச்சேரியில் பீர் உள்ளிட்ட மதுபானங்களின் விலை திடிரென உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் பதுச்சேரி அரசு ,  கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளி நாட்டு மதுபானங்களின் விலை உயர்த்தப்படும் என அறிவித் தது. இந்நிலையில் புதுச்சேரி கலால் துறை மதுபானங்களின் விலையை உயர்த்தி அரசானை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து  புதுச்சேரியில் மதுபான விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது. அதன்படி, பீர் ஒன்றுக்கு 10  ரூபாய் உயர்ந்துள்ளது. இதேபோல் குறைந்த விலை குவர்ட்டார் பாட்டில் 4  ரூபாய் முதல் 7 வரையிலும், நடுத்தர குவர்ட்டார் பாட்டில் 7 முதல் 15 வரையிலும், விலை உயர்ந்த குவர்ட்டார் பாட்டில் 15 முதல் 30 ரூபாய் வரையிலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது  புல் பாட்டிலுக்கு  50 முதல் 80 ரூபாய் வரையிலும் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு, மதுப்பிரியர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.        

Next Story

மேலும் செய்திகள்