கடந்த 14ம் தேதி நடைபெற்ற தபால்துறை தேர்வு ரத்து - ரவிசங்கர் பிரசாத்

தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.
x
கடந்த ஞாயிறன்று இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தபால்துறை தேர்வு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்த தேர்வில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் புறக்கணிக்கப்பட்டன. கடந்த காலத்தில் தமிழ் மொழியில் நடத்தப்பட்ட இந்த தேர்வு, இந்த முறை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டதால், தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என, தமிழகம் முழுவதும் கண்டன குரல்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து இன்று நாடாளுமன்றத்தில், தமிழக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நான்கு முறை ஒத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அவை கூடியதும், அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், எழுந்து இந்த தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்