துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக மக்களை இழிவாக சித்தரித்து சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதாக புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
x
புதுச்சேரி ஆளுநர் மாளிகை அருகே  நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும்,  சட்டமன்ற உறுப்பினருமான சிவா தலைமையில், 200க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்துகொண்டு துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். கிரண்பேடியை மத்திய அரசு  திரும்பப்பெற வேண்டும் என்றும், தமிழக மக்களிடம் கிரண்பேடி மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும்  ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்