பட்ஜெட் அச்சிடும் பணி துவக்கம் - சம்பிரதாயப்படி அல்வா தயாரித்தார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்

சம்பிரதாய அடிப்படையில் மத்திய நிதியமைச்சகத்தில் நடைபெற்ற அல்வா தயாரித்து வழங்கும் நிகழ்ச்சி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.
பட்ஜெட் அச்சிடும் பணி துவக்கம் - சம்பிரதாயப்படி அல்வா தயாரித்தார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்
x
2019-2020ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் 5 ம்தேதி தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்ற நிலையில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால், இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பட்ஜெட் ஆவணங்களை அச்சிடும் பணி தொடங்கியது. இதையடுத்து சம்பிரதாய அடிப்படையில் மத்திய நிதியமைச்சகத்தில் நடைபெற்ற அல்வா தயாரித்து வழங்கும் நிகழ்ச்சி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்