சங்கரதாஸ் சுவாமிகளின் 153 வது பிறந்தநாள் விழா - பார்வையாளர்களை கவர்ந்த நாடகங்கள்

சங்கரதாஸ் சுவாமிகளின் 153 வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் நடைபெற்ற நாடக விழாவினை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர்.
சங்கரதாஸ் சுவாமிகளின் 153 வது பிறந்தநாள் விழா - பார்வையாளர்களை கவர்ந்த நாடகங்கள்
x
புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறை மற்றும் தஞ்சை தென்னக பண்பாட்டு துறை சார்பில் இவ்விழா நடந்தது. கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் நடைபெற்ற விழாவில் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் நாடக நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பல்வேறு கலைக் குழுவினரின் நடத்திய நாடகத்தில் நலம் தரும் நாரதர் என்ற நாடகம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நாடக நிகழ்ச்சியினை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்