புதுச்சேரி : அரசு ஊழியர் வீட்டில் பல நாட்களாக ஏ.சி. இயந்திரத்திலே தங்கிய பாம்பு

புதுச்சேரியில் பல நாட்களாக சரிவர இயங்காத ஏ.சி இயந்திரத்தை திறந்து பார்த்தபோது அதில் பாம்பு ஒன்று பல நாட்களாக தங்கி இருந்த‌து தெரிய வந்துள்ளது.
புதுச்சேரி : அரசு ஊழியர் வீட்டில் பல நாட்களாக ஏ.சி. இயந்திரத்திலே தங்கிய பாம்பு
x
புதுச்சேரியில் பல நாட்களாக சரிவர இயங்காத ஏ.சி இயந்திரத்தை திறந்து பார்த்தபோது, அதில், பாம்பு ஒன்று பல நாட்களாக தங்கி இருந்த‌து தெரிய வந்துள்ளது. புதுச்சேரி தேங்காய்திட்டை சேர்ந்த அரசு ஊழியர் ஏழுமலை தனது வீட்டில் உள்ள ஏ.சி இயந்திரம் சரிவர வேலை செய்யாத‌தால், மெக்கானிக்கை நாடியுள்ளார். மெக்கானிக் , ஏ.சி.யை பிரித்து பார்த்த போது, ஏ.சி இயந்திரத்திற்குள் பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதையடுத்து,  வனத்துறையினர் உதவியுடன் பாம்பு ஏ.சியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. ஏ.சிக்கு வரும் பைப் ஒன்று சரியாக அடைக்காத‌தால், பாம்பு தினமும் அவ்வழியாக வந்து ஏ.சியில் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்