ராபர்ட் வதேரா மீதான வழக்கின் விசாரணை அதிகாரி மாற்றம்

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்களை வாங்கி விற்றுள்ளார்
ராபர்ட் வதேரா மீதான வழக்கின் விசாரணை அதிகாரி மாற்றம்
x
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா, இங்கிலாந்து தலைநகர் லண்டனில், பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்களை வாங்கி விற்றுள்ளார். இதில்  மோசடி செய்துள்ளதாக, மத்திய அரசின் அமலாக்க துறை  அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், அமலாக்கத்துறை சார்பாக  இந்த வழக்கை விசாரித்து வரும் ஐபிஎஸ் அதிகாரி ராஜிவ் சர்மா, திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, இந்திய வருவாய் துறை பிரிவு அதிகாரி மகேஷ் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், வழக்கு தொடர்பாக, டெல்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் ராபேர்ட் வதேரா ஆஜரானார். அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்