பிரியங்கா வந்த போது மோடி மோடி என முழங்கிய பா.ஜ.க.வினர் : காரில் இருந்து இறங்கி வந்து வாழ்த்து தெரிவித்த பிரியங்கா காந்தி

இந்தூர் விமான நிலையத்தில் இருந்து காரில் பிரியங்கா காந்தி வந்த போது மோடி மோடி என முழக்கம் எழுப்பிய வண்ணம் இருந்தனர்
பிரியங்கா வந்த போது மோடி மோடி என முழங்கிய பா.ஜ.க.வினர் : காரில் இருந்து இறங்கி வந்து  வாழ்த்து தெரிவித்த பிரியங்கா காந்தி
x
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் விமான நிலையத்தில் இருந்து காரில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி  வந்த போது, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தவர்கள், மோடி மோடி என முழக்கம் எழுப்பிய வண்ணம் இருந்தனர். அவர்களை கடந்து சென்ற பிரியங்கா காந்தி, காரை நிறுத்தி இறங்கி சென்றார். பா.ஜ.க. தொண்டர்களிடம் கைகுலுக்கிய பிரியங்கா காந்தி, நீங்கள் நீங்களாக இருங்கள், நான் நானாக இருக்கிறேன் என கூறிய படி வாழ்த்து தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அங்கு சற்று நேரம் பரபரப்பான சூழல் உருவானது.

Next Story

மேலும் செய்திகள்