ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை தடை செய்ய வேண்டும் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
தீவிரவாதத்தை ஒடுக்கினாலும், மீண்டும் தலை தூக்குவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வேதனை தெரிவித்தார்.
தீவிரவாதத்தை ஒடுக்கினாலும், மீண்டும் தலை தூக்குவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வேதனை தெரிவித்தார். இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புனித ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, இலங்கை மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய புதுச்சேரி அரசு தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
Next Story