எல்லையில் பதற்றம் - தயார் நிலையில் மத்திய படைகள்

எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக, மத்திய படைகள் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
x
எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக, மத்திய படைகள் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்மட்டக்குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், ரா அமைப்பு, தேசிய பாதுகாப்பு தலைவர்கள், மத்திய உள்துறை செயலாளர்கள், பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் ஜோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளதால் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.  முடிவில், எல்லை பாதுகாப்புப் படை மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினரை உஷார் நிலையில் இருக்க மத்திய உள்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்