சோலார் பேனல் விநியோக உரிமை மோசடி வழக்கு - சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன் வழக்கிலிருந்து விடுவிப்பு

சோலார் பேனல் மோசடி செய்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்படாததால் சரிதா நாயர் மற்றும் பிஜூ ராதாகிருஷ்ணன் இருவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
சோலார் பேனல் விநியோக உரிமை மோசடி வழக்கு - சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன் வழக்கிலிருந்து விடுவிப்பு
x
கேரளாவில், சோலார் பேனல் விநியோக உரிமை வழங்குவதில் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்படாததால் சரிதா நாயர் மற்றும் பிஜூ ராதாகிருஷ்ணன் இருவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த, எர்ணாகுளம் முதன்மை குற்றவியல் நீதிமன்றம், சரிதா நாயர் மற்றும் பிஜூ ராதாகிருஷ்ணன் ஆகிய இருவர் மீதான பண மோசடி புகாரை, மனுதாரர் நிரூபிக்கவில்லை என கூறி, வழக்கிலிருந்து விடுவித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனிடையே, உம்மன்சாண்டி முதலமைச்சராக இருந்தபோது, அவர் வழங்கிய கடிதம் என கூறி பலரிடமிருந்து பண மோசடியில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் இதே நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்க உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்