இடைக்கால பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கருத்து

நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும் முன்னோட்டமாக, பட்ஜெட் அமைந்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இடைக்கால பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கருத்து
x
நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும் முன்னோட்டமாக,  பட்ஜெட் அமைந்துள்ளது என  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 5 லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெறுவோருக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய பிரதமர், இதன் மூலம் சுமார் 3 கோடி பேர் பயன் அடைவார்கள் என குறிப்பிட்டார். விவசாயிகள் நலன்களுக்காக பட்ஜெட்டில் எண்ணற்ற திட்டங்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள மோடி, பிரதமரின் கிஷான் சமான் நிதி திட்டம் மூலம் சுமார் 12 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள் என்றும் கூறினார். நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனையும் முன்னேற்றத்தை நோக்கி அழைத்து செல்லும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்