தெலங்கானாவில் மீண்டும் ஆணவ கொலை : உடலை எரித்து சாம்பலை தண்ணீரில் கரைத்த பெற்றோர்

தெலங்கானா மாநிலத்தில் காதல் திருமணம் செய்து மகளை, கொலை செய்த பெற்றோர், உடலை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
x
தெலங்கானா மாநிலத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட அம்ருதா என்ற பெண்ணின் தந்தை , கூலிப்படையை அனுப்பி அப்பெண்ணின் கணவரை வெட்டி கொன்றார்.   இச்சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தெலங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டத்தில் உள்ள தலமடுகு கிராமத்தை சேர்ந்த அனுராதா என்ற பெண், லட்சுமணன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் அனுராதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். இந்நிலையில் தாமும் தனது காதலரும் திருமணம் செய்து கொண்டதாகவும், தங்கள் உயிருக்கு, பெற்றோரால் ஆபத்து உள்ளதாகவும் அனுராதா தெரிவித்திருந்தார்.

Next Story

மேலும் செய்திகள்