என்கவுன்ட்டரில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - ஆபரேஷன் முடிவுக்கு வந்ததாக ராணுவம் அறிவிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த என்கவுன்ட்டர் தாக்குதலில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
என்கவுன்ட்டரில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - ஆபரேஷன் முடிவுக்கு வந்ததாக ராணுவம் அறிவிப்பு
x
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த என்கவுன்ட்டர் தாக்குதலில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து கடந்த சில தினங்களாகவே தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில் ஒரு ராணுவ வீர்ரும், 7 அப்பாவி பொது மக்களும் பலியாயினர். இந்நிலையில் இன்று மீண்டும் அந்த பகுதியில் நடைபெற்ற என்கவுன்ட்டர் தாக்குதலில், 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு அவர்களிடமிருந்து ஆயுதங்கள்  கைப்பற்றப்பட்டுள்ளன. இத்துடன் இந்த ஆபரேஷன் முடிவுக்கு வந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்