தடுப்பூசி போடப்பட்ட 30 குழந்தைகள் அவதி
உத்தர பிரதேசம் ஷாஜகான்பூர் நகரில் தட்டம்மை- ரூபல்லா தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகள் 30 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் பள்ளி ஓன்றில் நேற்று தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. தட்டமையை தடுப்பதற்கான தடுப்பூசி போடப்பட்ட சிறுது நேரத்திலேயே குழந்தைகள் ஒருவர் பின் ஒருவராக தலை வலியால் துடித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், பாதிக்கப்பட்ட குழந்தைகளை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
Next Story