பணியிடங்களில் பாலியல் கொடுமைகளை தடுக்க நடவடிக்கை : ராஜ்நாத் சிங் தலைமையில் குழு அமைக்க ஒப்புதல்

பணியிடங்களில் பாலியல் கொடுமைகளை தடுக்க புதிய அமைப்பை உருவாக்கி, அதற்கு விதிமுறைகளை வகுக்க உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மூத்த அமைச்சர்கள் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பணியிடங்களில் பாலியல் கொடுமைகளை தடுக்க நடவடிக்கை : ராஜ்நாத் சிங் தலைமையில் குழு அமைக்க ஒப்புதல்
x
பணியிடங்களில் பாலியல் கொடுமைகளை தடுக்க புதிய அமைப்பை உருவாக்கி, அதற்கு விதிமுறைகளை வகுக்க உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மூத்த அமைச்சர்கள் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டதாக, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். இந்த குழுவில் மூத்த அமைச்சர்கள் நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் மற்றும் மேனகா காந்தி ஆகியோர் இட​ம் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்