எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன உயர் அதிகாரிகளுடன், பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார்.
எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
x
எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன உயர் அதிகாரிகளுடன், பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார். டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், இந்தியா மட்டுமின்றி சர்வதேச எண்ணெய் நிறுவன அதிகாரிகளும், நிபுணர்களும் கலந்து கொண்டனர். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ் குமார் ஆகியோரும் இந்த சந்திப்பின் போது உடனிருந்தனர். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நடத்தியுள்ள ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்