இந்தியாவில் அதிக மழை பெறும் பகுதிகள்...

இந்தியாவில் அதிக மழை பெறும் பகுதிகள் குறித்து, இந்த செய்தி தொகுப்பில் காணலாம்...
இந்தியாவில் அதிக மழை பெறும் பகுதிகள்...
x
இந்தியாவில் அதிக மழை பெறும் பகுதி சிரபுஞ்சி என்று தான் சொல்வார்கள்... ஆனால், இதற்கு அருகில் உள்ள Mawsynram என்ற மலை கிராமம்,  சிரபுஞ்சியை பின்னுக்கு தள்ளிவிட்டது... 

மேகாலயா மாநிலத்தில் உள்ள சிரபுஞ்சியில் ஆண்டுக்கு, சராசரியாக, 11 ஆயிரத்து 619 மி.மீ., மழைப் பொழிவு காணப்படுகிறது. ஆனால், Mawsynram-ல் சராசரியாக 11 ஆயிரத்து 872 மி.மீ., மழை பெய்துள்ளது... இந்த சாதனை, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது... மேலும், ஆசியாவில் அதிக மழை பெறும் பகுதியாகவும் கருதப்படுகிறது...

கர்நாடகா :
அகும்பே மழைப் பொழிவு - 7,691 மி.மீ.
அகும்பே - தென்னிந்தியாவின் சிரபுஞ்சி

அடுத்தது, Agumbe... பெங்களூரிலிருந்து 380 கி.மீ. தொலைவில் உள்ளது அகும்பே மலைப் பிரதேசம். இது, தென் இந்தியாவின் சிரபுஞ்சி என்றழைக்கப்படுகிறது. கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள இந்த மலைப்பாங்கான சுற்றுலா தலத்தில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 7 ஆயிரத்து 691 மி.மீ. மழை பெய்கிறது. மழைக் காலங்களில் இங்குள்ள  நீர்வீழ்ச்சிகளில், தண்ணீர் கொட்டும் காட்சி காண்பவர் மனதை கொள்ளை கொண்டு விடுகிறது... 

மகாராஷ்டிரா :
அம்போலி - 7,500 மி.மீ. சராசரி மழைப் பொழிவு
மூடு பனி சூழ்ந்த மலைப்பிரதேச சொர்க்கபுரி

அடுத்தது Amboli... மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள  ஒரு மலைப் பிரதேசமாகும். மூடுபனி சூழ்ந்த சொர்க்கம் என்றழைக்கப்படுகிறது.. இங்கு, ஆண்டு சராசரி மழைப்பொழிவு 7 ஆயிரத்து 500 மி.மீ. ஆகும். 

மகாராஷ்டிரா :

மஹாபலீஸ்வர் - 5,618 மி.மீ., மழைப் பொழிவு
உயரமான மலைப் பிரதேச பகுதிகள்

அடுத்தது Mahabaleshwar... இதுவும் மகாராஷ்டிரா மாநிலம் தான்... சாத்தாரா மாவட்டத்தில் மஹாபலீஸ்வர் அமைந்துள்ளது. சுமார் 4 ஆயிரம் அடி உயரமுள்ள மலைப் பிரதேசமான இங்கு, ஆண்டுக்கு சராசரியாக 5 ஆயிரத்து 618 மி.மீ. மழைப்பொழிவு காணப்படுகிறது. மும்பையில் இருந்து 5 மணி நேர பயணத்தில் இந்த இடத்தை அடையலாம்... இந்த இடம் சிறந்த சுற்றுலா தலமாகவும், தேன்நிலவிற்கேற்ற இடமாகவும் பிரபலமடைந்துள்ளது. 
  
அருணாச்சல பிரதேசம் :
பாசிகாட் - 4,388 மி.மீ., மழைப் பொழிவு
தேயிலை தோட்டங்கள் நிறைந்த பகுதி

அடுத்தது, Pasighat ... இது, அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள கிழக்கு சியாங் மாவட்டத்தின் தலைநகரமாகும். இது அருணாசலப் பிரதேசத்தின் பழமையான நகரங்களில் ஒன்று... இங்கு ஆண்டு மழைப்பொழிவு 4 ஆயிரத்து 388 மில்லி மீட்டராக இருக்கிறது... இது, இயற்கை எழில் கொஞ்சும் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த பகுதியாகும்... 

சிக்கிம்
காங்டாக் - 3,737 மி.மீ. மழைப் பொழிவு

அடுத்தது Gangtok... சிக்கிம் மாநிலத்தின் மிகப்பெரிய நகரமான கேங்டாக், இமயமலையின் கீழ்ப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தியா விடுதலை பெற்ற பிறகு 1975-ஆம் ஆண்டு இந்தியாவுடன் சேரும் வரை சிக்கிம் தனிநாடாகவே இருந்தது. அப்போது, கேங்டாக் அதன் தலைநகராக இருந்தது. இந்நகரம் திபெத்திய பௌத்த மதத்திற்கான முக்கியமான மையமாகவும் விளங்குகிறது. ஊரைச் சுற்றிலும் பல பௌத்த மடலாயங்கள் உள்ளன. இங்கு ஆண்டுக்கு சராசரியாக 3 ஆயிரத்து 737 மி.மீ. மழைப் பொழிவு காணப்படுகிறது... 

தென்மேற்கு பருவ மழை 40 மி.மீ.,
வட கிழக்குப் பருவமழை 440 மி.மீ.,

இதெல்லாம் சரி... தமிழகத்தின் மழைப்பொழிவு எவ்வளவு தெரியுமா...?

தென்மேற்கு பருவமழையின்போது தமிழகத்தின் சராசரி மழை அளவு 40 மி.மீ ஆகும்... வட கிழக்கு பருவமழையில் தமிழகத்தின் சராசரி மழை அளவு 440 மி.மீ. ஆகும்... இதற்கே ஆடிப் போய் விடுகிறார்களே...?

Next Story

மேலும் செய்திகள்