"குரு கிராந்த் சாகிப்" புனித நூல் உருவான தினம்

சீக்கியர்களின் புனித நூலான "குரு கிராந்த் சாகிப்" உருவான தினத்தை ஒட்டி, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள தங்கக் கோயில் மின் அலங்காரத்தில் ஜொலித்தது.
குரு கிராந்த் சாகிப் புனித நூல் உருவான தினம்
x
"பர்காஷ் உத்சவ்" எனும் பெயரில் கொண்டாடப்படும் இந்த விழாவை முன்னிட்டு, சீக்கியர்களின் புனித இடமான தங்கக் கோயில், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்து. இங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சீக்கிய மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விளக்குகளை ஏற்றி, வழிபாடு நடத்தினர்.  இதையொட்டி, பஞ்சாப் மாநில அரசு நேற்று விடுமுறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்