டெல்லியில் முதலாவது சர்வதேச மொபிலிட்டி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

டெல்லி விஞ்ஞான் பவனில் 2 நாள் நடைபெறும் முதலாவது குளோபல் மொபிலிட்டி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து பேசினார்.
டெல்லியில் முதலாவது சர்வதேச மொபிலிட்டி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
x
டெல்லி விஞ்ஞான் பவனில் 2 நாள் நடைபெறும் முதலாவது குளோபல் மொபிலிட்டி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து பேசினார். உலகில் வேகமாக வளர்ந்து வரும் மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் உள்ளதாக பெருமிதத்துடன் பிரதமர் மோடி குறிப்பிட்டார். நாட்டில் உள்ள மாநகரங்கள் மற்றும் நகரங்கள் உள் கட்டமைப்பில் வேகமாக வளர்ந்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர், சாலை, ரயில் பாதை, விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் அமைக்கும் பணி முழுவேகத்தில் நடந்து வருவதாக பிரதமர் கூறினார். எதிர்க்கால வேகமான பொருளாதார இயக்க நிலைக்கு 7 வழிகளை பிரதமர் சுட்டிக்காட்டினார்.  பொது போக்குவரத்து அனைவருக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்