ஏ.டி.எம் கார்டுகளை மாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் மர்ம நபர்கள்

சேலம் மாவட்டம் ஓமலூரில் ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்க தெரியாமல் வரும் மக்களின் கார்டுகளை பயன்படுத்தி மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏ.டி.எம் கார்டுகளை மாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் மர்ம நபர்கள்
x
சேலம் மாவட்டம் ஓமலூரில்  ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்க தெரியாமல் வரும் மக்களின் கார்டுகளை பயன்படுத்தி மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு  வருகின்றனர். ஏ. டி.எம் மையங்களுக்கு வருபவர்களிடம்,  மர்ம நபர்கள் பணம் எடுக்க உதவுவது போல் அவர்களிடம் இருந்து ரகசிய எண்களை பெற்றுவிடுகின்றனர். பின்னர் அவர்களிடம் பணம் வரவில்லை என கோரி, போலி ஏடிஎம் கார்டுகளை கொடுத்து விடுகின்றனர். அதனை தொடர்ந்து மர்ம நபர்கள் அந்த கார்டுகளை பயன்படுத்தி பணத்தினை கொள்ளை அடித்து வருகின்றனர். இந்நிலையில், மர்ம நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்