பேராசிரியை நிர்மலாதேவிக்கு இன்று குரல் மாதிரி பரிசோதனை

குரல் மாதிரி பரிசோதனைக்காக சென்னை அழைத்து வரப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பேராசிரியை நிர்மலாதேவிக்கு இன்று குரல் மாதிரி பரிசோதனை
x
கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்றதாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். 
மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிர்மலா தேவிக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்தது. இதையடுத்து, நிர்மலா தேவிக்கு சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் இன்று குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட உள்ளது. 

இதற்காக, மதுரை சிறையிலிருந்து நிர்மலாதேவியை  நேற்று சென்னை அழைத்து வந்த சிபிசிஐடி போலீசார், புழல் சிறையில் அடைத்தனர். இன்று அவருக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்ட பிறகு, மீண்டும் மதுரை அழைத்து சென்று நாளை சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்