விசாரணையின் போது பாலியல் துன்புறுத்தல்- நடிகை ஸ்ருதி

விசாரணையின் போது காவல்துறை அதிகாரிகள், பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாக நடிகை ஸ்ருதி தெரிவித்துள்ளார்.
விசாரணையின் போது பாலியல் துன்புறுத்தல்- நடிகை ஸ்ருதி
x
கோவையில் இளைஞர்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஸ்ருதி நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

இந்த நிலையில் அவர், கோவை 3வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்ருதி அடையாளம் தெரியாத எண்களில் இருந்து பலர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாக தெரிவித்தார். 

விசாரணையின் போது காவல்துறை அதிகாரிகள், பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்