தமிழ்நாடு

தமிழகத்தில் 227 கல்லூரிகளுக்கு நோட்டீஸ் : இணைப்புக் கட்டணம் செலுத்தாததால் நடவடிக்கை

பல்கலைக்கழக இணைப்புக் கட்டணம் செலுத்தாத 227 கல்வியியல் கல்லூரிகளுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தந்தி டிவி

* தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 700 கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

* இந்த கல்லூரிகள், பல்கலைக்கழகத்திற்கு இணைப்புக் கட்டணமாக 75 ஆயிரம் ரூபாயை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை செலுத்த வேண்டும்.

* இந்த தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் செலுத்தவில்லை என்றால், 50 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் கட்டணத்தை செலுத்த வேண்டும். அதன்படி, கடந்த அக்டோபர் 31ஆம் தேதியுடன் இக்கல்லூரிகள் தங்கள் இணைப்புக்கட்டணத்தை செலுத்தியிருக்க வேண்டும்.

* ஆனால், தற்போது வரை 227 கல்வியியல் கல்லூரிகள் இணைப்புக் கட்டணத்தை செலுத்தாமல் இருப்பதாகக் கூறி, அந்த கல்லூரிகளின் முதல்வர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் ரவீந்திரநாத் தாகூர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்