மதுரை ஆயுதப்படை சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்த மகேந்திரன், அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த தலைமை காவலரின் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மதுரை மாவட்ட மகளிர் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சார்பு ஆய்வாளர் மகேந்திரனுக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வழங்கி தீர்ப்பளித்தார்.