பஸ்ஸில் ஏறி நடத்துநர் மீது தாக்குதல் | பெண் பயணியின் உறவினர்களால் பரபரப்பு
பேருந்தில் ஏறி அரசு பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் - விசாரணை சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்தில், அரசு பேருந்து நடத்துனர் மீது பெண் பயணி மற்றும் அவரது உறவினர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்திலிருந்து வந்த அரசு பேருந்தில், வடமாநில பயணிகள் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம், நடத்துனர் ஆசாத் சந்திரசேகர் மற்றும் பயணி பிரியதர்ஷினி இடையே மோதலாக மாறியது. எடப்பாடி பேருந்து நிலையத்தில், பிரியதர்ஷினியின் உறவினர்கள் பேருந்துக்குள் நுழைந்து நடத்துனரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த நடத்துனர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த எடப்பாடி போலீசார், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.