விளையாட்டு

2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஒருநாள் போட்டி : மீண்டும் களைகட்டிய சேப்பாக்கம் மைதானம்

2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஒருநாள் போட்டி நடைபெற உள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தந்தி டிவி
2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஒருநாள் போட்டி நடைபெற உள்ளதால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இறுதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியா சேப்பாக்கம் மண்ணில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. அதன் பின் 2 ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகள் இங்கு நடைபெறாமல் இருந்து வந்த நிலையில், தற்போது வரும் ஞாயிற்று கிழமை மேற்கு இந்திய தீவுகள் அணியை எதிர்கொள்ள உள்ளது. மேற்கு இந்திய தீவுகள் அணி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், இந்திய அணியே இன்று மாலையில் தான் சேப்பாக்கம் மைதானத்திற்கு வர உள்ள நிலையில், மேற்கு இந்திய தீவுகள் அணி வீர‌ர்கள் காலை முதலே தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்