விளையாட்டு

2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஒருநாள் போட்டி : மீண்டும் களைகட்டிய சேப்பாக்கம் மைதானம்

2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஒருநாள் போட்டி நடைபெற உள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தந்தி டிவி
2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஒருநாள் போட்டி நடைபெற உள்ளதால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இறுதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியா சேப்பாக்கம் மண்ணில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. அதன் பின் 2 ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகள் இங்கு நடைபெறாமல் இருந்து வந்த நிலையில், தற்போது வரும் ஞாயிற்று கிழமை மேற்கு இந்திய தீவுகள் அணியை எதிர்கொள்ள உள்ளது. மேற்கு இந்திய தீவுகள் அணி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், இந்திய அணியே இன்று மாலையில் தான் சேப்பாக்கம் மைதானத்திற்கு வர உள்ள நிலையில், மேற்கு இந்திய தீவுகள் அணி வீர‌ர்கள் காலை முதலே தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"