தற்போதைய செய்திகள்

ஆர்.எஸ்.பாரதி பேசிட்டு சென்ற போது "பாரத் மாதா கி ஜெய்" என கோஷம் - கார் கண்ணாடி உடைத்து திமுகவினர் தாக்குதல்

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில், திமுக பொதுக்கூட்ட மேடை அருகே நிகழ்ந்த தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேறறு உரையாற்றி விட்டு, மேடையை விட்டு இறங்கிச் சென்ற போது, அவ்வழியாக காரில் வந்தவர்கள் "பாரத் மாதா கி ஜெய்" என கோஷமிட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர், அந்த காரை வழிமறித்து தாக்கினர்.

போலீசார் தடுக்க முயன்றும், சுற்றி வளைத்து தாக்கியதில் கார் கண்ணாடி சேதமடைந்தது. ஒரு வழியாக போலீசார் அந்த காரை சம்பவ இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர். நெல்லை பாளையங்கோட்டையிலிருந்து குற்றாலம் சென்ற அவர்கள், கோஷமிட்டது தெரியவந்த நிலையில், அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || குரூப்2, 2A தேர்வுகள் ரத்து ஏன்? என்ன நடந்தது? - தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் விளக்கம்

BREAKING || தமிழ்நாடு முழுவதும் குரூப்2, 2A தேர்வுகள் ரத்து - கடைசி நேரத்தில் திடீர் அறிவிப்பு

BREAKING || குரூப் 2 தேர்வில் குளறுபடி.. சென்னையில் நடுரோட்டில் போராட்டத்தில் குதித்த இளைஞர்கள்...

CM Stalin | PM Modi | "தமிழக அரசு தயார்" - பிரமருக்கு முதல்வர் அனுப்பிய செய்தி

Chennai Dense Fog | சென்னையில் கடும் பனிக்கு இதுதான் காரணம்..