ஆபரேஷன் சிந்தூர் கொடியுடன் 14000 அடி உயரத்தில் இருந்து குதித்து சாதனை படைத்த பெண்
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்த ஸ்கை டைவரான அனாமிகா ஷர்மா தாய்லாந்து நாட்டில் ஆபரேஷன் சிந்தூர் என எழுதப்பட்ட கொடியை பிடித்த படி சுமார் 14000 அடி உயரத்திலிருந்து கீழே குதித்து சாதனை படைத்துள்ளார். இந்திய ராணுவத்திற்கு மரியாதையும் ஆதரவும் அளிக்கும் விதமாக இதனை செய்ததாக அனாமிகா ஷர்மா தெரிவித்துள்ளார்.