இந்தியா நிறுத்தி வைத்துள்ள சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் இயல்பான செயல்பாட்டை உடனடியாக மீண்டும் தொடங்குமாறு இந்தியாவை பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்துவதில் பாகிஸ்தான் உறுதியாக இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு சற்று ஆதரவாக நடுவர் நீதிமன்றம் கூறிய கருத்துக்களை வரவேற்பதாகவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.