Morocco Flood | திடீரென பூதம் போல் வந்த வெள்ளம் - 37 பேர் பலி.. இன்னும் பலர் நிலை?
மொராக்கோவின் அட்லாண்டிக் கடலோர மாகாணமான சஃபியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 37 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்திற்கு 70-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்து இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.