ஈரானில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது. 750க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். துறைமுக நகரா பந்தர் அப்பாஸில் BANDAR ABBAS வெடி விபத்து மற்றும் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கரும்புகை வெளியேறியது. துறைமுகத்தில் உள்ள கண்டெய்னர் யார்டில் பயங்கர சத்தத்துடன் வெடித்ததால், ரசாயன பொருட்கள் வைத்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெறும் நிலையில், விமானத்தில் இருந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது