நேபாளத்தில் நிலநடுக்கம் - இந்தியாவில் தெரிந்த அறிகுறி.. பீதியில் மக்கள்
நேபாளத்தின் நேற்று இரவு 8 மணி அளவில் கர்னாலி பிரதேசத்தில் உள்ள டெய்லேக்கில் இருந்து சுமார் 33 கிலோமீட்டர் தொலைவில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கத்தில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ள நிலையில், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகள் இந்திய தலைநகர் பகுதிகளிலும், வடமாநிலங்களான உத்தர பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்து வருகின்றனர்.