புதுச்சேரி, வில்லியனூரில் வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். இதில் வில்லியனூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா! கோவிந்தா! என்று கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.