சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் நடவாவி உற்சவத்தை கண்டருளினார். அய்யங்கார்குளத்தில் உள்ள நடவாவி கிணற்றின் நீராழி மண்டபத்தில் எழுந்தருளி, மூன்று முறை சுற்றி வலம் வந்தார். கிணற்றிலிருந்து வெளியே எழுந்தருளிய வரதராஜ பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்து, கோவிந்தா, கோவிந்தா, என கோஷமிட்டு வழிபட்டனர்.