திருச்சியை உலுக்கிய அலறல்... பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட வெட்டிப் படுகொலை... கடைசி நிமிட காட்சிகள்

Update: 2025-01-28 13:32 GMT

திருச்சி ஸ்ரீரங்கத்தில் பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ரவுடி திலீப் கூட்டாளியான ரவுடி அன்பு, ஜிம்முக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியபோது 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனிடையே, அன்பு உயிருக்கு போராடிய கடைசி நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்