Tiruvannamalai | Deepam Festival | தீபத்திருவிழா 3ம் நாள் வீதியுலா | தி.மலையில் திரண்ட பக்தர்கள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவின் மூன்றாம் நாளையொட்டி விநாயகர், சந்திரசேகரர் பூத வாகனங்களில் மாட வீதியுலா வந்தனர்.
முன்னதாக கோயிலில் விநாயகர் மற்றும் சந்திரசேகரருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டு கோயிலின் முன்பாக உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து பஞ்சமூர்த்தி தீபாரதனைகள் நடைபெற்ற நிலையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.